Tuesday 22 November 2016

பிரியமானவளே...

பிரியமானவளே... 

என்னை கண்டதும் உன் விழிகளில் 
உருவான கண்ணீர்... 

கீழே விழாமல் 
தாங்கிக்கொள்கிறது உன் இமைகள்... 

இதழ்கள் நடுநடுங்க 
சொல்கிறாய்... 

நீங்கள் நன்றாக இருக்க 
வேண்டுமென்று வாழ்த்துகிறாய்... 

நிச்சயம் உனக்காக 
நான் இருப்பேனடி... 

நீயோ நானோ வேண்டாமென்று 
சொல்லவில்லையடி கண்ணே... 

உன் பெற்றோரின் விருப்பத்திற்காக 
தியாகம் செய்தோம் நம் காதலை... 

காதலுக்காக நாம் பெற்றோர்களை 
தியாகம் செய்யவில்லையடி... 

நீ இல்லாமல் என்னால் 
இருக்கமுடியாதுதான்... 

உன் சந்தோஷத்திற்காக சந்தோசமாக 
இருக்க முயற்சி செய்கிறேன்... 

நீயும் முயற்சி 
செய்யாதே... 

உன் முகத்தில் புன்னகையோடு 
நீ இருக்கவேண்டுமடி... 

நாம் சந்திக்கும்போதெல்லாம் 
நீ எனக்கு கொடுக்கும் புன்னகை... 

மீண்டும் ஒருமுறை உன்னை 
நான் பார்க்க நேர்ந்தால்... 

அப்போது வேண்டுமடி அதே புன்னகை 
உன் முகத்தில் எனக்கு... 

என் உயிரானவளே.....

1 comment:

  1. I know the same pain..Even though we can find our happiness from other's happiness. :) Love you forever my dear soulmate..<3

    ReplyDelete